மதுபோதையில் தகராறு செய்த தந்தை - மனவேதனையில் மகள் எடுத்த விபரீத முடிவு.. திருப்பூரில் சோகம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் விஜயாபுரத்தை அடுத்த மருதப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் மகள் சாதனா. இவர் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே, சாதனாவின் தந்தை வீரப்பன் மது போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தில் தினமும் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சாதனா வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது மதுபோதையில் அங்கு வந்த தந்தை வீரப்பன் தகராறு செய்துள்ளார். அப்போது சாதனா, தந்தையிடம் குடிப்பழக்கத்தை கைவிடும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் சாதனாவை தரக்குறைவாக பேசியுள்ளார். 

இதனால் மனமுடைந்த அவர் விஜயபுரம் கருப்பராயன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, அவரின் உடலை தேடினர். 

நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மாணவியின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

girl sucide for father fight with drunk in tirupur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->