வெம்பக்கோட்டை அகழாய்வு - 0.15 கிராம் எடை கொண்ட தங்கத்தினால் ஆன மணி கண்டெடுப்பு..! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள, வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த அகழாய்வு பணியில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதேபோல், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. 

இந்தப் பொருட்கள் அனைத்தும் அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வெம்பக்கோட்டையில் தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தினால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

1.28 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த தங்கத்தினால் ஆன மணி, 0.15 கிராம் எடை கொண்டதாக உள்ளது. அகழாய்வு பணியில் தொடர்ந்து பழங்கால பொருட்கள் கிடைத்து வருவதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gold bell found in vembakottai escavation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->