அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து.! 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


அரசு பேருந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது சூடப்பட்டி பகுதி அருகே முன்னாள் சென்ற லாரியை பேருந்து முந்த முயன்ற போது எதிர்பாராத விதமாக சாலை ஓரம் இருந்த மரத்தின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government bus accident in dharmapuri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->