ஒரு லட்சத்தை கடந்த அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை; ஒரே நாளில் 08 ஆயிரம் மாணவர்கள் சேர்ப்பு..!
Government school student enrollment crosses one lakh
அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 5 லட்சம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வழங்கியுள்ளது.
தற்போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில் கடந்த 1-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. இத்யனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து, அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரையிலான 20 நாட்களில் வந்த 14 வேலை நாட்களில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளதாக கூறப்படுகிறது, அதிலும் பெரும்பாலும் 1-ம் வகுப்புக்கு அதிகமான மாணவர் சேர்க்கை நடக்கிறது.
அத்துடன், இன்று ஒரே நாளில் மட்டும் 08 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் மொத்தம் 01 லட்சத்து 06 ஆயிரத்து 268 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Government school student enrollment crosses one lakh