சிக்கன் பிரியாணிக்கு வெட்டுக்கிளி சைடிஷ் - பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி.!
Grasshopper on chicken biriyani in namakkal
சிக்கன் பிரியாணிக்கு வெட்டுக்கிளி சைடிஷ் - பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் அருகே கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பாஸ்ட்புட் உணவகம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில், பரமத்தி பகுதியைச் சேர்ந்த டேவிட் என்பவர் தனது வீட்டிற்கு சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, அவர் அந்த பார்சலை வீட்டிற்கு சென்று பிரித்து சாப்பிட முயன்ற போது அதில் வெட்டுக்கிளி ரோஸ்ட் செய்யப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
![](https://img.seithipunal.com/media/vaan kozhi biriyani in-klvfz.gif)
பின்னர் பிரியாணி வாங்கிய கடைக்கு சென்று தான் வாங்கி சென்ற பிரியாணியில் வெட்டுக்கிளி இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் இவருக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக டேவிட் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் படி அங்கு வந்த போலீஸார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்தை நடத்தி, பிரியாணி பார்சலை உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் வழங்கி அதை சோதனை செய்யுமாறு அறிவுறுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Grasshopper on chicken biriyani in namakkal