4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்! 17 ஆம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்று மற்றும் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  

குறிப்பாக இன்று, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

மேலும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னையில் இன்று மற்றும் நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்படுகிறது.  

நாளை (மார்ச் 12) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை அதிகமான அளவில் தொடர வாய்ப்பு உள்ளது.  

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் வரும் மார்ச் 17-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy Rain in TN IMD Alert 12 march 2025


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->