கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை.. வெப்பம் தணிந்து குளிர்ச்சி!
Heavy rain lashes Kanyakumari district Cool down the heat
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதியம் 1 2 மணி முதல் 12.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று சனிக்கிழமை கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, கன்னியாகுமரி,நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மதியம் 1 2 மணி முதல் 12.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.
நாகர்கோவில்,கொடுப்பைக்குழி,குருந்தன்கோடு,அரசன்விளை,சரல் மற்றும் அலன்விளை போன்ற பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் பிரதான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலை உட்பட முக்கிய சாலைகளில் உள்ள கிடங்குகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.

பின்னர் விட்டு விட்டு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
Heavy rain lashes Kanyakumari district Cool down the heat