விருதுநகர் அருகே கோர விபத்து!....பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே  மம்சாபுரத்தில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நோக்கி இன்று காலை சிற்றுந்து பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பள்ளி  மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மற்றும் பொதுமக்கள் என  ஏராளமான பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் உள்ள இடதுபுறத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த கோரா விபத்தில், சம்பவ இடத்திலேயே 4 மாணவர்கள் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த  மாணவர்கள் சதீஷ்குமார், நிதீஷ் குமார், ஸ்ரீதரன் மற்றும் வாசுதேவன் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் 15க்கும் மேற்பட்டோர் மருத்துவையில் சிகிக்சை பெற்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வருவாய்த் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்த விபத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள  சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horrible accident near virudhunagar 4 students died when the bus overturned


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->