தேனியில் பரபரப்பு.! மனைவியை தீவைத்து எரித்த கணவர்.! குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம்..! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் மனைவியை கணவர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன்(58). இவரது மனைவி தேவகனி(43). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததால் தேவகனி கணவருடன் கோபித்துக் கொண்டு உத்தமபாளையத்தில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து, நேற்று மனைவியை பார்க்க சென்ற துரைப்பாண்டியன் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் தேவகனி வர மறுத்துள்ளார். இதனால் துறைபாண்டியன் ஆத்திரத்தில் தேவகனி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தேவகனியை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு தேவகனி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவியை தீ வைத்து எரித்த கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband set his wife on fire in theni


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->