அதிகாரிகள் மீது பயங்கரத் தாக்குதல் - ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!
isha supporters attack officers in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த நிலையில், மின் தகன மேடையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை அறிவதற்குச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினரைத் தடுத்து நிறுத்தி, ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அளித்த புகாரின் அடிப்படையில், ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், கொலை மிரட்டல், முறையற்று தடுத்தல் என மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
isha supporters attack officers in coimbatore