இவர்கள் இருவரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி. தினகரனும், பன்னீர் செல்வமும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை ஒட்டி ராயபுரத்தில் ஏழை எளிய மக்கள் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, தேர்தல் தேதி அறிவித்ததும் அ.தி.மு.க தலைமையில் நல்ல கூட்டணி அமையும். கூட்டணி குறித்து முறையான அறிவிப்பை பொதுச்செயலாளர் வெளியிடுவார். 

பாஜகவின் பூச்சாண்டி வேலை எல்லாம் அதிமுகவிடம் எடுபடாது. பா.ஜ.க, டி.டி.வி தினகரன், பன்னீர்செல்வம் இவர்களெல்லாம் வெங்காயத்தைப் போல உரிக்க உரிக்க தோலாகத்தான் இருப்பார்கள் உள்ளே ஒன்றுமே இருக்காது. 

டி.டி.வி தினகரனும் பன்னீர் செல்வமும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். காசு பணம் துட்டு மணி என்பதுதான் தி.மு.க அரசுக்கும் நிர்வாகிகளுக்கும் தாரக மந்திரம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jayakumar speech goes viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->