சத்துணவுத் திட்டத்தில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் நலனுக்காக, சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளியில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள், தினசரி மதிய உணவு உட்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நாளும் விதவிதமான சத்துணவு வகைகள் தயாரித்து, பரிமாறப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை இங்குக் காண்போம்.

மொத்த காலிப்பணியிடங்கள்:- 8,997 

மாத ஊதியம்:- தேர்வு செய்யப்படுபவர்கள் மாதம் ரூ.3,000 என்ற தொகுப்பூதியம் அடிப்படையில் இந்தப் பணியில் நியமனம் செய்யப்படுபவர். அவர்கள் 12 மாதங்கள் வரை பணிபுரியலாம். 

இதில், திருப்திகரமாக வேலை பார்ப்பவர்கள் தகுதியானவர்களாக கருதப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியமாக மாதம் ரூ. 3,000 முதல் ரூ.9,000 வரை வழங்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in govt school nutritional program


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->