சட்டமன்றத்தை முடக்கிய பாமக, பாஜக, அதிமுக உறுப்பினர்கள்!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சிகள் விஷ சாராயம் குடித்து 49 பேர் உயிரிழந்த சம்பவத்தை முன்வைத்து, தமிழக சட்டமன்றத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். 

பாட்டாளி மக்கள் கட்சியை தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களும் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும் சட்டப்பேரவையை ஒத்திவைத்து உடனடியாக இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று, பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் குரல் எழுப்பினர். 

இதில் பாமக மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவையில் பங்கேற்றுள்ளனர். மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் ராஜினாமா செய் என்ற பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், எதிர்க்கட்சிகள் மிரட்டல் விடுத்து முற்றுகையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

மேலும் கேள்வி நேரம் முடிந்தவுடன் கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் சபாநாயகர் விளக்கம் அளித்தார். 

சட்டப்பேரவையை முடக்கும் சூழ்நிலை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். 

இருப்பினும் துறைமுருகனை சட்டமன்றத்தில் பேசவிடாமல் பாமக, பாஜக, அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து  கோஷமிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallasarayam issue TN Assembly PMK ADMK BJP MLA


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->