தி.மு.க அழியும் என சொன்னவர்கள் நிலை இதுதான்... கனிமொழி எம்.பி. பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal



சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது, 

தேர்தல் நேரம் என்பதால் திட்டங்களை அறிவித்துள்ளார்கள். தமிழக முதல்வர் வைத்த ஒரு கோரிக்கையை கூட மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. 

நலத்திட்டங்களை தி.மு.க எப்போது எதிர்ப்பதில்லை. மத்திய அரசு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கால்வாசி தொகையை மட்டுமே வழங்குகிறது. 

தி.மு.க அழியும் என சொன்னவர்கள் பலரும் காணாமல் போய் உள்ளனர். மாநில அரசுதான் குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலம் வாங்கியது. எங்களது பெயரைச் சொல்ல கூட பிரதமருக்கு மனம் வரவில்லை. 

முதல்வரின் கனவு திட்டம் என்பதால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அரசியல் வேறு, மதம் வேறு என்பதை உணர்ந்தவர்கள் தமிழக மக்கள். தமிழ்நாட்டில் உரிமைகளுக்காக போராடுவது தி.மு.க என்பதை பொதுமக்கள் அறிவர் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kanimozhi speech goes viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->