கார்த்திகை தீப திருநாள்: வடபழநி ஆண்டவர் கோவிலில் 108 விளக்குகள் ஏற்றம்! - Seithipunal
Seithipunal


கார்த்திகை திருநாளை முன்னிட்டு வட பழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள், உபயதாரர்கள் சார்பில் 108 விளக்குகள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 

அதுபோல் இந்த ஆண்டும் பக்தர்கள், உபயதாரர்கள் மூலம் 150 க்கும் மேற்பட்ட விளக்குகள் வழங்கப்பட்டன. அவற்றில் 108 விளக்குகள் வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் சன்னதியில் பக்தர்கள், உபயதாரர்கள் மூலம் ஏற்றப்பட்டன.

மூலவர் சன்னதியில் 36 குத்துவிளக்கு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பிரஹார பகுதியில் 8001 மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கார்த்திகை மகா தீப திருநாளான இன்று அதிகாலை 4:30 மணியளவில் நடை திறக்கப்பட்டு காலை 6:30 மணி அளவில் அபிஷேகம் முடிந்து மூலவருக்கும் முருகப்பெருமானுக்கும் ராஜ அலங்காரம் நடத்தப்படுகிறது. 

கார்த்திகை தீப திருநாள் தரிசனம் முடித்து வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக பொரி உருண்டை வழங்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karthigai Depa Thirunal Vadapalani Andavar Temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->