கச்சத்தீவை தரவே முடியாது - இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உறுதிபட தெரிவித்துள்ளார். - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு க ஸ்டாலின் சற்று முன்பு கடிதம் எழுதியுள்ளார். 

இலங்கை கடற்படையால்தமிழக மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவது கடந்த 1 வருடமாக அதிகரித்து வருகிறது.

இதற்க்கு முக்கிய காரணம் இந்தியாவின், குறிப்பாக தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், இலங்கையிடம் இந்தியா தாரைவார்த்ததுதான் என்று சொல்லப்படுகிறது.

மேலும், அப்போது ஆட்சியில் இருந்த திமுகவுக்கும் இதில் பங்கு இருப்பதாக இப்போதுவரை குற்றம் சட்டப்படுவருகிறது. இந்த விவகாரம் கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கையிலெடுத்த பாஜக, திமுகவைவும், காங்கிரசையும் கடுமையாக விமர்சித்தது.

இருப்பினும் இந்த அரசியல் பிரச்சாரம் இருவழியாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் வந்து நின்றது. 

இந்நிலையில், கச்சத்தீவை தரவே முடியாது என்று இலங்கை அதிபர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கொழும்பு அதிபர் மாளிகையில் தமிழகத்தை சேர்ந்த தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டியளித்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இதனை தெரிவித்துள்ளார்.

அதில், "கச்சத்தீவு பற்றிய பேச்சுவார்த்தைக்கு இலங்கை தயார் இல்லை. இந்தியாவுக்கு எப்படி காஷ்மீரோ, அப்படித்தான் இலங்கைக்கு கச்சத்தீவு"  இன்றி இலங்கை அதிபர் ரணில் உறுதிபட தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Katchatheevu Srilanka Fishermen india


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->