ஊழலில் ஊறிப்போன ஆட்சி... மோடி மீதான பயத்தில் கதறுகிறது: நடிகை குஷ்பூ ஆவேசம்! - Seithipunal
Seithipunal


தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, இந்த தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி ஆயுள் தண்டனை பெறுவார் எனவும் 400கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளார் எனவும் கடுமையாக விமர்சித்தார். 

இது தொடர்பாக பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும் மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பூ தெரிவித்திருப்பதாவது, 

விலை கொடுத்து வாங்கி பழக்கப்பட்டவர்களுக்கு அது போன்ற எண்ணம் தான் வரும். இன்று சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி முதல் பெரும்பாலானோர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றவர்கள். 

அவர்களெல்லாம் எவ்வளவு விலை கொடுத்து வாங்கினார்கள் என்பதையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும். அடுத்தவர்களின் சொத்துக்கணக்கை கேட்க ஆசைப்படும் தி.மு.கவினர் முதலில் அவர்களது சொத்துக்களை பற்றி நினைத்து பார்க்க வேண்டும். 

ஊழலில் ஊறிப்போன தி.மு.க., பாஜகவை பார்த்து விரல் நீட்ட கூட தகுதியற்றது. நாடு முழுவதும் ஊழல் செய்பவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களிடம் ஓட்டு கேட்கிறார்கள். எப்படி மக்கள் அவர்களை ஆதரிப்பார்கள். 

ஆனால் ஊழலை ஒழிக்க மோடி போராடுகிறார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் நிலைமை என்ன ஆகுமோ என்ற பயத்தில் தான் இப்படி கதறுகின்றார்கள். 

தி.மு.க., தேர்தல் நெருங்க நெருங்க அவர்களுக்கு பயமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Khushboo speech goes viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->