#தமிழகம் || காலேஜ் ஸ்டுடென்ட் என்று பொய் சொல்லிய நாடக காதலன் அஜித்., கைவிட்ட காதலியின் வீடு சூறை.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், குனியமுத்தூர் அருகே காதலை கைவிட்ட ஆத்திரத்தில், காதலியின் வீடு புகுந்து கார், பைக் உள்ளிட்டவைகளை நடக்க காதலன் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிகே புதூரை சேர்ந்த அஜித் என்ற கூலி தொழிலாளி, தான் கல்லூரியில் படித்து வருவதாக கூறி, அந்த பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார்.

அஜித் கல்லூரி மாணவன் அல்ல, ஒரு கூலித் தொழிலாளி என்பதை அறிந்து கொண்ட கல்லூரி மாணவி, அவனுடன் பழகுவது, அவனை பார்ப்பதையும், அவனின் காதலையும் கைவிட்டு உள்ளார்.

இதனால் ஏமாற்றம் அடைந்த அஜித், அந்த மாணவி கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் பின் தொடர்ந்து தொந்தரவு தந்துள்ளான். மேலும் அந்த கல்லூரி மாணவி கொலை மிரட்டலும் விடுத்துள்ளான்.

இதுகுறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் அஜித்தை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித், தனது நண்பன் மனோவுடன் சேர்ந்து மாணவியின் வீடு புகுந்து, அங்கிருந்த மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அப்பகுதியில் மறைந்திருந்த அஜித் மற்றும் அவனின் கூட்டாளி மனோவை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kovai p k pudur drama lover arrest


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->