அதிகாலை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள்.. குப்பையில் கிடந்த அதிர்ச்சி.! கோவையில் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் துடியலூர் அருகே வி.கே.எல் நகர் இருக்கிறது. இங்கு குடியிருப்புகளில் நிறைய மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் அன்றாடம் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவார்கள். 

வழக்கம் போல இன்று காலை தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த குப்பை தொட்டி ஒன்றில் ஒரு மனித கை கிடந்தது. இதை பார்த்து தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

இந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். குப்பைத் தொட்டியில் கிடந்த கையை ஆராய்ச்சி செய்தனர். அது 40 வயது மதிக்கத்தக்க வாலிபருடைய இடது கை என்றும், அந்த கையானது வெட்டப்பட்டு மூன்று நாட்களுக்கு மேலாகி இருக்கும் என்பதும் பாரன்சிங் ரிபோர்ட் படி தெரியவந்துள்ளது. 

இது யாருடைய கை அல்லது யாரையாவது கொலை செய்து அந்த கையை மட்டும் இங்கு கொண்டு வந்து வீசி சென்றுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இந்த பகுதிகளில் காணாமல் போன நபர்களின் விவரங்களையும் சேகரித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kovai police found human hand


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->