#கோவை || நாடக காதலன் ஏமாற்றியதால், தனியார் நீட் பயிற்சி மைய மாணவி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கோவையில் உள்ள ஆர்எஸ் கோபுரத்தை அடுத்த சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் சுவேதா (வயது 19). இவர் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மெடிக்கல் அகாடமியில் நீட் தேர்வுக்காக அங்குள்ள விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவேதாவிற்கு அதே பயிற்சி மையத்தில் படித்து வரும் மதுரை சேர்ந்த மாணவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

இதன் பிறகு அவர்கள் அடிக்கடி நேரில் நேரில் சந்திப்பதும் செல்போனில் பேசி வருவதுமாக இருந்தனர். இவர்களின் இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்குத் தெரியவரவே, காதலர்களை அழைத்து பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

ஆனால், இவர்கள் இந்த காதலை தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில், மாணவரின் பெற்றோர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரையிலிருந்து வந்து தன்னுடைய மகனை அழைத்துச் சென்றனர். இதனால், பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் மாணவி சுவேதா இருந்தார்.

மேலும், சம்பவத்தன்று உடல் நிலை சரியில்லை எனக் கூறி வகுப்புக்கு செல்லாமல் அறையில் தனியாக இருந்த சுவேதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து‌ விசாரணை நடத்தினர். 

விசாரணையின்போது ஸ்வேதா வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட காதல் கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kovai seeranayakkan neet student suicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->