காஷ்மீரில் பிரிவினைவாதத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்; அமித்ஷா கோரிக்கை..!
Separatism in Kashmir should be completely abandoned Amit Shah demands
ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது. இதனை வரவேற்பதாக உள்துறை அமைச்சர் அமித்-ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஹரியத்தின் இரண்டு அமைப்புகளான ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது. பாரத ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதைபோன்று அனைத்து அமைப்புகளும் முன்வந்து பிரிவினைவாதத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வளர்ந்த, அமைதியான மற்றும் ஒன்றுபட்ட பாரதத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இது ஒரு பெரிய வெற்றியாகும் என்றும் குறித்த பதிவில் அமித்-ஷா தெரிவித்துள்ளார்.
English Summary
Separatism in Kashmir should be completely abandoned Amit Shah demands