பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிமாரம்பட்டி அப்பகுதியில் லாரி ஓட்டுனராக பிரபாகரன் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 17 பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் பிரபாகரனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரபாகரனுக்கு 1000 ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

மேலும், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிரபாகரனுக்கு மொத்தமாக 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lorry driver raped school girl


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->