காஞ்சிபுரம் || கையில் கட்டையுடன் சென்ற கும்பல் - காதல் ஜோடி செய்த தரமான சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் || கையில் கட்டையுடன் சென்ற கும்பல் - காதல் ஜோடி செய்த தரமான சம்பவம்.! 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானாமதி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் மகன் ஹரிஷ். ஓரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர், அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த செங்கல்பட்டு மாவட்டம் பாலையூரைச் சேர்ந்த ஆர்த்தி என்பவரை காதலித்து வந்தார். 

இந்த விவகாரம் ஆர்த்தியின் உறவினர்களுக்கு தெரிந்ததால் ஆர்த்திக்கு உடனடியாக திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய ஆர்த்தி, அச்சரப்பாக்கத்தில் கடந்த ஒன்றாம் தேதி ஹரிஷை திருமணம் செய்து கொண்டார். 

அதன் பின்னர் அவர் மானாமதி கண்டிகையில் உள்ள கணவர் வீட்டில் தங்கியிருந்தார். இதையறிந்த ஆர்த்தியின் உறவினர்கள் உருட்டுக்கட்டைகளுடன் ஹரிஷ் வீட்டுக்கு வந்து மிரட்டிச் சென்றனர். இதனால் பயந்துபோன தம்பதியினர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். 

பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்தனர். இதையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட  காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

love couples took refuge in kanchipuram police station


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->