#மதுரை || சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்., திமுக நிர்வாகி அதிரடியாக கைது  - Seithipunal
Seithipunal


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், திமுக பிரமுகர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளார். 

மதுரை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தின்கீழ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வலையங்குளம் திமுக கிளை செயலாளர் வீரன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி வீரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அண்மைக்காலமாக சிறுமிகள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் இளம் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்களில் அரசியல் கட்சி பிரமுகர்களும் கைதாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MADHURAI CHILD Harassment dmk member arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->