NEET Exam || வேதனையோடு நீதிபதி கொடுத்த அனுமதி... உருக்கமான பின்னணி.!! - Seithipunal
Seithipunal


இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுத போகும் மாணவி தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டதால் அவர் டயப்பர் அணிந்து நீட் தேர்வு எழுத உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதியளித்துள்ளது. வரும் மே 5ம் தேதி நாடு முழுவதிலிருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ள 19 வயது மாணவி ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தீ விபத்தில் சிக்கியதால் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வின்போது டயப்பர் அணிந்திருக்கவும் தேவைப்படும்போது அதை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீட் தேர்வு எழுதவரும் மாணவிகளிடம் வரம்பு மீறிய சோதனை நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார். நீட் தேர்வுக்கான ஆடை கட்டுப்பாட்டில் மாணவிகள் சானிட்டரி நாப்கின் அணிய அனுமதி வழங்கியிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதி இந்த வழக்கில் மனுதாரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்றுக் கொண்டுள்ளது என வேதனையுடன் நீதிபதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc allowed student write neet exam with diaper


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->