சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் அவசரக்கால வழக்குகள் விசாரணை செய்யப்படும் என நீதிமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, மே 7 மற்றும் 8 தேதிகளில் நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிக்கின்றனர். தொடர்ந்து, மே 14, 15, 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் மற்றும் நிர்மல் குமர் அமர்வு மேற்கொள்வார்கள். 

மேலும், மே 28 மற்றும் 29 தேதிகளில் நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, சத்தியநாராயணா பிரசாத் மற்றும் திலகவதி ஆகியோர் அமர்வு நடத்த உள்ளனர்.

இதற்கிடையே, மதுரை கிளை நீதிமன்றத்திற்கும் விடுமுறை அமர்வுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல், பாலாஜி, ஜோதிராமன், வேல் முருகன், ராமகிருஷ்ணன், ராஜசேகர், ஸ்ரீமதி, விஜயகுமார், வடமலை, ஆனந்த் வெங்கடேஷ், ஷமீன் அகமதி மற்றும் பூர்ணிமா ஆகியோர் விடுமுறை நீதிபதிகளாக பணியாற்றுவார்கள்.

விடுமுறை காலத்திலும் அவசரமான வழக்குகளுக்கான சட்ட நடவடிக்கைகள் நிலைத்திருக்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MadrasHC Summer Holiday


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->