சேலத்தில் இரு குழந்தைகள் மர்ம மரணம்! பெற்ற தாயே கொலை செய்தாரா?
salem 2 child death in mystery
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தில், தண்ணீர் தொட்டியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு வசித்து வரும் கட்டடத் தொழிலாளி விஜயகுமார் (35) மற்றும் அவரது மனைவி இளவரசி (30) தம்பதிக்கு, விக்னேஷ் (6), சதீஷ்குமார் (3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கிடையே குடும்பத் தகராறு தொடர்ந்து ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு, வீட்டின் முன் தோண்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் இரு குழந்தைகளும் இறந்த நிலையில் கிடந்ததை உறவினர்கள் கவனித்து, உடனே மீட்டனர். தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதையடுத்து, மகன்களின் உயிரிழப்பு குறித்து அதிர்ச்சியடைந்த விஜயகுமார், உறவினருடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டபோது, துக்கியாம்பாளையத்தில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவருக்கு முதலில் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இரு மகன்களையும் தாயே கொன்றிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டதையடுத்து, இளவரசி மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
salem 2 child death in mystery