வெளியில் சென்ற கணவன்.. வீட்டிற்கு வந்த போது கண்ட கொடூரம்.! உடனே தற்கொலை முயற்சி.!  - Seithipunal
Seithipunal


மதுரை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை உருவாக்கியுள்ளது. 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்ற கட்டிட தொழிலாளிக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கின்றன. பண பிரச்சனை காரணமாக அய்யனாருக்கும், அவரது மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

கணவர் இல்லாத நேரம் பார்த்து மனைவி தனலட்சுமி தனது இரு மகன்களுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். வெளியில் சென்ற அய்யனார் வீட்டிற்கு திரும்பி வந்து நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் உடனடியாக உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். 

அங்கே மனைவி மற்றும் பிள்ளைகள் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரும் தற்கொலைக்கு முயற்சித்தார். உடனடியாக அக்கம், பக்கத்தினர் அய்யனாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai family death make shock to husband


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->