மதுரை அருகே கொடூர விபத்து: நெஞ்சை பதைபதைக்க வைக்கும்  சிசிடிவி காட்சிகள்.!   - Seithipunal
Seithipunal


மதுரை, கப்பலூர் சுற்றுச் சாலையில் காரை உரசிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்தை விரட்டிப்பிடிக்க முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த அரசு மருத்துவரின் கார், சாலை தடுப்பை தாண்டி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்தவர் கார்த்திகேயன். இவர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றுவிட்டு, இன்று காலை திருநெல்வேலியில் இருந்து மதுரை வந்துகொண்டிருந்தார்.

மதுரை பரம்புப்பட்டி அருகே கார்த்திகேயன் கார் வந்து கொண்டிருந்தபோது, பேருந்து ஒன்று அவரின் காரை உரசி சென்றுள்ளது, இதனால் அந்த பேருந்தை துரத்திப் பிடிக்க கார்த்திகேயன் தனது காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது, கார்த்திகேயன் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மறுபுறம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது.

கார்த்திகையின் உடல் நசுங்கி கொடூரமான முறையில் உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சிசிடிவி காட்சிகள் கார்த்திகேயன் கார் எந்த அளவுக்கு வேகமாக சென்றது என்றும், அது கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் சென்ற பேருந்தின் மீது மோதிய கொடூர காட்சியும் பதிவாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

,MADURAI PARAMPUPATTI CAR ACCIDENT


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->