கோவை ஈஷா மகா சிவராத்திரி விழா.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகை.! - Seithipunal
Seithipunal


கோவை ஈஷா மகா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க இன்று தமிழகம் வருகிறார்.

குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரௌபதி முர்மு அவர்கள் முதல் முறையாக இன்று தமிழகம் வருகை புரிவதால் அவருக்கு பாதுகாப்பு  ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. 

அதன்படி, இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து அவர், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார்.

அதன்பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கு ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, நாளை காலை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெல்லிங்டன் ராணுவப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள கோவை விமான நிலையத்தில் இருந்து, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வெல்லிங்டன் ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்ல உள்ளார்.

குடியரசுத்தலைவர் வருகையை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாகன சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அதன் பின்னர் பயணத்தை முடித்துக்கொண்டு குடியரசுத்தலைவர் நாளை மதியம் டெல்லி செல்வார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maha Shivaratri festival president Draupadi Murmu comes to tamilnadu today


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->