சென்னையில் முகவரி கேட்பது போல் பெண்களை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் முகவரி கேட்பது போல் பெண்களை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த வாலிபர் கைது.!

சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் வாடகைக்கு இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்னையில் உள்ள திருமங்கலம், முகப்பேர், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வலம் வந்து பூங்கா அருகில் மாலை நேரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகள், பெண்கள் ஆகியோரிடம் முகவரி கேட்பது போல் கேட்பார்.

இதையடுத்து பெண்க மற்றும் சிறுமிகள் முகவரியைப் பார்த்து கொண்டிருக்கும்போது அவர்களை திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பி ஓடி விடுவார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை அமைத்து சரவணனைத் தேடி வந்தனர். 

இதற்கிடையே, சரவணன் முகப்பேரில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றுள்ளனர்., போலீசார் வருவதை பார்த்த சரவணன் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

உடனே போலீசார் அவரை துரத்தி சென்ற போது சரவணன் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சரவணனுக்கு கை உடைந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சரவணனை பிடித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த பின்பு புழல் சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for kiss and hug to womans and girls in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->