யூடியூப் பார்த்து சங்கிலி பறித்த வாலிபர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே நேதாஜி தெருவைச் சேர்ந்த சீதாலட்சுமி என்பவரிடம் 2 பவுன் சங்கிலியும், கிழக்கு தாம்பரம், ஆஞ்சநேயர் தெருவில் நித்திய சுபா என்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியையும் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பறித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் படி போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு பெண்களிடமும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது கோவில்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் என்பதும், தற்போது சென்னையை அடுத்த மடிப்பாக்கம், ராம்நகர் பகுதியில் குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது:- சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்த அருணாசலத்திற்கு சரியான வேலை கிடைக்காத்ததால் ஆன்லைன் வர்த்தகத்தில் கவனம் செலுத்தினார்.

ஆனால், இதில் நஷ்டம் ஏற்பட்டு சுமார் 15 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். இந்தக் கடனை அடைப்பதற்காக 'யூடியூப்' பார்த்து சங்கிலி பறிப்பில் ஈடுபட முடிவு செய்தார். அதன்படியே தனியாக சென்ற சீதாலட்சுமி, நித்திய சுபா உள்ளிட்ட இருவரிடமும் சங்கிலி பறித்தது தெரியவந்தது.

அதில் 5 பவுன் நகையை தங்கையின் திருமணத்துக்காக வீட்டில் கொடுத்ததும், மீதமுள்ள 2 பவுன் நகையை அடகு வைத்து பணம் பெற்றதும், வருகிற 10-ந் தேதி அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for robbery in chennai


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->