நூலக பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அதிகாரி கைது..! - Seithipunal
Seithipunal


நூலக பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்த நூலக அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடையை சேர்ந்தவர் 43 வயது பெண் ஒருவர் கிராம நூலகம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.  கோவையில் உள்ள தலைமை நூலகத்தில் புத்தகம் இருப்பு கணக்கிடும் அதிகாரியாக இருக்கும் சுல்தான் மியாமணியம் என்பவர் அந்த பெண் பணியாற்றும் நூலகத்திற்கு அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது

புத்தக இருப்புகளை  சரிபார்க்க செல்லும் அவர் அடிக்கடி அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். மேலும், தொடர்ந்து அவரை உல்லாசத்திற்கு அழைத்து வந்துள்ளார். உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவதன்று, பணியில் இருந்த போது பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த பெண் சத்தம் போடவே அங்கிருந்து சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து, அந்த பெண்ணின்  வீட்டிற்கு சென்று பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். மேலும், இதனை பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சுல்தான் மியாமணியமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man arrested in Coimbatore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->