கோவிலில் யாருக்கு முதல் மரியாதை.. முன்விரோதத்தால் ஊராட்சி செயலர் கொலை..! - Seithipunal
Seithipunal


முன்விரோதம் காரணமாக ஊராட்சி செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம்,  இடையன்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுணன். இவர் அந்த பகுதியில் ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார். இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இதனால், அவருக்கு அந்த கோவிலில் முதல் மரியாதை கொடுத்து வருகின்றனர்.

இது அவர்களின் அண்ணன் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால். அவர்களுக்கிடையே தகராறு இருந்துள்ளன. சம்பவதன்று அண்ணன் மகன்கள் லட்சுமணனை சரமாரியாக வெட்டினர்.

இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man murder In Madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->