சிவகங்கை: எங்க முன்னால புல்லட்டுல போவியா? பட்டியல் சமூக மாணவரின் கையை வெட்டிய கொடூரம்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை அருகே பட்டியல் சமூக மாணவரின் கையை கொடூரமாக வெட்டிய மூன்று மாற்று சமூக இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்த அய்யாசாமி என்பவர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

பட்டியல் சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அய்யாசாமி, தந்தை இறந்ததால் தனது சிறிய தந்தையின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

இவர்கள் தங்களது கிராமத்தில் வசதி வாய்ப்போடு இருந்து வருவது மாற்று சமூகத்தினர் சிலர் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியதாகவும், அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், சம்பவம் நடந்த நேற்று கல்லூரி முடிந்து அய்யாசாமி தனது ராயல் என்ஃபீல்டு புல்லட் வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த மூன்று பேர் எங்கள் முன்னாலேயே நீ புல்லட்டில் வரலாமா? என்று தடுத்து நிறுத்தி அய்யாசாமியின் கையை கையை வெட்டி உள்ளனர்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
 
மேலும் கல்லூரி மாணவரை வெட்டிய வல்லரசு உள்ளிட்ட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manamadurai SC College student Attack


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->