மன்சூர் அலிகானின் முன் ஜாமின்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் மன்சூர் அலிகான் மீது பெண்களை இழிவு படுத்தி பேசுதல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சை பேச்சை தொடர்ந்து நடிகை திரிஷாவிடம் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டார். இதனை தொடர்ந்து திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mansoor alikhan bail rejected


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->