சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானுக்கு விதித்த அபராதம் ரத்து! - Seithipunal
Seithipunal


நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததற்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்க வேண்டாம் என தெரிவித்தார்.

 

மேலும் நடிகராக இருக்கும் ஒரு நபரை பல இளைஞர்கள் பின்பற்றும் நிலையில் பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொள்ளலாம் மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துங்கள் என  அவர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி தெரிவித்தார். 

இதற்கிடையே மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி மன்சூர் அலிகானுக்கு ரூ. 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

இதனை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mansoor alikhan penalty cancel


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->