#விழுப்புரம் :: மரக்காணம் கள்ளச்சாராய பலி 6 ஆக உயர்வு.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஒட்டியுள்ள வம்பாமேடு பகுதியைச் சேர்ந்த சங்கர், தரணிவேல், சுரேஷ் ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்ததில் இன்று காலை உயிரிழந்தனர். மேலும் கலாச்சாராயம் குடித்த 16 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் கள்ளச்சாராயம் அருந்தியதால்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி மலர்விழி என்பவரும் உயிரிழந்தால் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னாங்கட்டி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Marakanam fake liquor Death increased at 6


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->