இன்று முதல் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும்! - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று முதல் (வியாழக்கிழமை) மெட்ரோ ரெயில் சேவைகள் வாரநாள் அட்டவணையின்படி வழக்கம்போல் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, அனைத்து மெட்ரோ முனையங்களிலிருந்தும் முதல் ரெயில் காலை 5 மணிக்கு புறப்படும், மற்றும் கடைசி ரெயில் இரவு 11 மணிக்கு புறப்படும். 

சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை, மற்றும் விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை 3 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இச்சேவைகள் வழக்கம்போல தொடர்ந்தும் பயணிகளுக்கு சவுகரியம் வழங்கும் வகையில் செயல்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metro trains will run as normal from today


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->