மாளிகையிலேயே இருந்துகொண்டு பேச கூடாது நேரில் வந்து பார்க்க வேண்டும் - ஆளுநரை ஆட்டி வைத்த மேயர் பிரியா.! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கான திட்டங்கள் குறித்து குறை கூறுவதற்கு பதிலாக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

"பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை தனியாருக்கு டெண்டர் வழங்குவது தொடர்பான முடிவு பரிசீலனையில் உள்ளது. இதற்கான தீர்வு விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழகத்தின் தலைநகர் சென்னை, பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது ஆளுநர் மாளிகையிலேயே இருந்து கொண்டு குறை கூறுவதற்கு பதிலாக பெண்களுக்கு இந்த ஆட்சியில் எந்த அளவு முக்கியத்துவம் உள்ளது, பெண்களுக்கான திட்டங்களை எந்த அளவிற்கு இந்த ஆட்சி செயல்படுத்தி வருகிறது, எத்தனை பெண்கள் இதனால் பயனடைந்து வருகிறார்கள் என்று நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

meyar priya speech about governor rn ravi in chenna


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->