நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம் டீ மாஸ்டராக மாறும் அமைச்சர்..!  - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான், தற்போது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம் வழியில் உள்ள டீக்கடைக்கு சென்று அமர்ந்து டீ குடிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த கடையில் அவரே டீ மாஸ்டராகவும் மாறி, டீ போட்டு அங்கு வருபவர்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் கொடுப்பதை செய்து வருகிறார். 

அதேபோல், சில மாதங்களுக்கு முன்பு அவரது தொகுதியில் விசிட் செய்த அவர் அனந்தபுரம் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக மாறி டீ போட்டுக் கொடுத்து அசத்தினார்.

இந்நிலையில், நேற்று திண்டிவனம் அருகில் பட்டணம் கிராமத்தில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு கலந்து கொள்வதற்கு சென்ற அமைச்சர் மஸ்தான், திண்டிவனம் வழியாக வரும்போது சந்தை மேடு பகுதியில் திமுகவினர் பலர் பொதுமக்களுடன் நின்று கொண்டிருந்தனர். 

அங்கு காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய அமைச்சர் அங்கிருந்த டீக்கடைக்குச் சென்று டீ மாஸ்டராக மாறி கடை உரிமையாளர் உட்பட கட்சியினருக்கும் டீ போட்டுக் கொடுத்ததோடு கடைக்கு டீ குடிக்க வந்தவர்களுக்கும் டீ போட்டுக் கொடுத்து அசத்தினார். இதேபோல், ஒருமுறை ஓட்டலுக்குச் சென்று அங்கு பரோட்டா தயார் செய்து சாப்பிட வந்தவர்களுக்கு கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அப்பகுதி திமுகவினர் தெரிவிக்கையில், “அமைச்சர் மஸ்தான், ஆரம்ப காலங்களில் செஞ்சி பேருந்து நிலையத்தில் சொந்தமாக டீ, பரோட்டா கடை வைத்து நடத்தினார். அதை என்றும் மறக்காமல் அமைச்சர் என்ற அந்தஸ்தில் உயர்ந்த பிறகும்கூட பழைய வாழ்க்கையை மறக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அதை நினைவுபடுத்தும் வகையில் தற்போதும் தொகுதியில் சுற்றுப்பயணம் வரும்போது அவ்வப்போது இதுபோன்று செயல்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்கள்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister senji mastan going to thindivanam temple fuction


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->