மூடநம்பிக்கையால் குழந்தையை கொலை செய்த தாய்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


5 மாத குழந்தையை கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும் கதிர் என்ற மகனும் உள்ளனர் இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.  கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி மகேஸ்வரன் வேலைக்கு சென்று  வீடு திரும்பிய போது குழந்தையை காணவில்லை என தெரிவித்துள்ளார்.

உடனடியாக காவல்துறைக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர் இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள அணை பகுதியில் புதரில் குழந்தை சடலம் கிடந்தது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட விசாரணையில் குழந்தையின் தாய் குழந்தையை தண்ணீரில் அழுத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

 இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது மேலும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அடிக்கடி ஏற்பட்டன. குழந்தையும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டது .இந்நிலையில், இது குறித்து எனக்கு தெரிந்த ஜோதிடர் ஒருவரிடம் கேட்டபோது கோவில் பிறந்த நேரம் சரியில்லை எனவும் அதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வரும் எனவும் தெரிவித்தார்.

இதனால் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டு வீட்டிற்கு அருகே உள்ள தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்று விட்டேன். கொலை செய்தது வெளியே தெரியாமல் இருப்பதற்காக குழந்தையை காணவில்லை என நாடகமாடியது தெரிவித்தார்.  பலர் குழந்தை இல்லை என வருந்தும் நிலையில் மூடநம்பிக்கையால் பெற்ற குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother Kills His Son


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->