#BREAKING | திமுக பெண் கவுன்சிலர் பிரியா குடும்பத்துடன் தற்கொலை!  - Seithipunal
Seithipunal



ராசிபுரம் நகராட்சி பெண் கவுன்சிலர், தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் பிரியா, தனது கணவர் மற்றும் மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மூவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கவுன்சிலர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது அரசியல் ரீதியாக மிரட்டல், அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டனரா? என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் காரணங்களால் தற்கொலை செய்து கொண்டனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Rasipuram DMK Councillor


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->