தமிழக மீனவரிகளின் மெத்த துப்பாக்கிச்சூடு தற்செயலானது - இலங்கை கடற்படை விளக்கம்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேர் கோடியக்கரைக்கு தென் கிழக்கே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி 13 மீனவர்களையும் கைது செய்தனர். 

இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேரில் அழைத்து, வெளியுறவுத்துறை அமைச்சகம், மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு ஏற்புடையது அல்ல. 

இந்த விஷயத்தில் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியது. இந்தக் கருத்தை இலங்கையில் உள்ள இந்திய தூதரகமும், இலங்கை அரசுக்கு தெரிவித்தது.

இதற்கிடையே நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, இலங்கை கடற்படை வீரர் ஒருவர் தற்செயலாக துப்பாக்கி சூடு நடத்தியதால் இரண்டு இந்திய மீனவர்களும் காயமடைந்ததாக இலங்கை கடற்படைத் தளபதி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

srilangan navy explain gun shoot to tn fishermans


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->