பொதுத்துறை செயலாளராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமித்து தமிழக அரசு உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த இறையன்பு ஐஏஎஸ் இன்று தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் இறையன்பு ஐஏஎஸ் வகித்து வந்த சில இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்நாடு பொதுத் துறை செயலாளராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மனிதவள மேம்பாட்டு துறை செயலாளராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உணவுத்துறை செயலாளராக இருக்கும் ஜெகநாதனுக்கு ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் இறையன்பு கவனித்து வந்த அண்ணா நிர்வாக பணியாளர்கள் கல்லூரி இயக்குனர் பதவியும் கூடுதலாக வழங்கி புதிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nandakumar IAS appointed as Public Sector Secretary


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->