ஏழுகிணறு அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டுத் தற்கொலை - கரணம் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ஏழுகிணறு பகுதியில் போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர்கள் அருண்குமார்-சாந்தி தம்பதியினர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர்களில் ஒருவர் மகாலட்சுமி.

இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், மகாலட்சுமி, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வந்த விளம்பரத்தை பார்த்து, ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார். இதில் அவர், ரூ.முப்பது ஆயிரம் வரை பணத்தை கட்டி இழந்துள்ளார்.

இதையறிந்த அவரது தாய் சாந்தி, பணம் இழந்தது குறித்து மகளை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகாலட்சுமி, நேற்று வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மக்களை நீண்ட நேரமாக காணாததால் சந்தேகம் எழுந்த சாந்தி அறைக்குச் சென்று பார்த்தபோது மகாலட்சுமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் கதறி அழுத்த சாந்தியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி போலீசார் விரைந்து வந்து மகாலட்சுமியின் உடலை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai college student sucide for loss money to online inversment


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->