பத்து ஆண்டுகால ஆட்சியில் அதிமுக எதையும் செய்யவில்லை - அமைச்சர் கே.என் நேரு பேச்சு..!  - Seithipunal
Seithipunal


சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என் நேரு தெரிவித்ததாவது,  “சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஸ்டாலின்  தொடர்ந்து நல்ல நல்ல பணிகளை செய்து கொண்டு வருகிறார். 

இந்நிலையில் அவர், வேளாண்துறைக்கு என்று ஒரு தனி பட்ஜெட் ஒதுக்கியுள்ளார். இதுவரை வேளாண் துறைக்கு 34 ஆயிரம் கோடி ஒதுக்கி என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. 

நான் முதன் முதலில் அமைச்சராகும் போது தமிழ்நாட்டின் பட்ஜெட் வெறும் 50 ஆயிரம் கோடி தான். ஆனால், இன்று வேளாண் துறைக்கு மட்டும் முதலமைச்சர் 34 ஆயிரம் கோடி தந்துள்ளார்.

10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக எதையும் செய்யவில்லை. ஆனால், தற்போது எல்லா நகரங்களிலும் பேருந்து நிலையம் எல்லா நகரங்களிலும் மார்கெட் என அனைத்து மக்களுக்கும் வசதிகள் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, “மழைநீர் வடிகால் 1100 கிலோ மீட்டர் அளவிற்கு அமைக்கப்படுகிறது என்று சொன்னால் அது மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் நடைபெறுகிறது. இந்த மழைநீர் வடிகால் இங்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நகரங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் 1400 கோடி பணம் ஒதுக்கி செய்யப்படுகிறது.

ஆனால், இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 1400 கோடி பணம் ஒதுக்கி, அனைத்து மக்களும் வசதி வாய்ப்புடன் இருக்க வேண்டும் என்று சொல்லி இதை செய்து கொண்டிருக்கிறார். இந்த "நகர்ப்புற வளர்ச்சித் துறை" கலைஞர் பார்த்த துறை என்பதால் அதில், தனி கவனத்துடன் செயல்படுகிறார்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai minister neru speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->