ஒட்டன்சத்திரம் : மூன்றாவது மாடியில் இருந்து குதித்த நர்சிங் மாணவி உயிரிழப்பு - மாதர் சங்கத்தினர் சாலை மறியல்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில், பழைய பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். 

இந்த மாணவி திடீரென கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த கல்லூரி நிர்வாகம் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். மூன்றாவது மாடியில் இருந்து கல்லூரி மாணவி குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near ottansathiram nursing college student sucide


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->