தமிழகத்தை சேர்ந்த அந்த 10 பேர்: ஹிஸ்ப்-உத் தஹிரிர் அமைப்பை தடைசெய்த மத்திய அரசு! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஹில்ப்-உத் தஹிரிர் அமைப்பை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால், மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 10 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில், இந்த ஹில்ப்-உத் தஹிரிர் அமைப்புக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்படி, பயங்கரவாத அமைப்பாக இந்த ஹில்ப்-உத் தஹிரிர் அமைப்பை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலமாக பயங்கரவாதத்தை இந்த அமைப்பு பயன்படுத்தியதும் தெரிய வந்ததால், தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது. 

பயங்கரவாத அமைப்பிற்கு இளைஞர்களை சேர்க்கும் செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டதாகவும் மத்திய அரசு தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது. 

இந்த அமைப்பை உலகின் பல நாடுகள் தடை செய்துள்ள நிலையில், தற்போது இந்திய அரசும் தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, இந்த அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hizb ut Tahrir ban in india


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->