22 கிலோ கஞ்சாவை கடத்திய 6 இளைஞர்கள்.! மாருதி ஸ்விப்ட் கருடன் கைது.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் சர்வீஸ் ரோடு அருகே உள்ள பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு ஒரு மாருதி ஸ்விப்ட் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பெரிய மூட்டையுடன் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த இளைஞர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், 22 கிலோ கஞ்சாவை ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புள்ள ஆறு இளைஞர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 22 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார், பிடிபட்ட இளைஞர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near trichy 22 kg kanja kidnape 6 peoples arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->